News November 15, 2025

வேலூர்: நகைக்கடையில் கைவரிசை – 3 ஆண்டுகள் சிறை!

image

வேலூர்: தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் வளையல்களை திருடி சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பானுமதி (39), அமராவதி (48) ஆகியோரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவ.15) ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பானுமதி, அமராவதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

வேலூர் : வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

வேலூர்: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

image

வேலூர் மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

வேலூரில் 40 ஆட்டோக்கள் பறிமுதல்!

image

வேலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சிறப்பு ஆட்டோ தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 40 ஆட்டோக்கள் நேற்று (14.11.2025) பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் நடந்த சோதனையில், 427 ஆட்டோக்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது போதையில் ஓட்டிய 4 ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!