News November 15, 2025

கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமை – 5 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி: மாத்துரை சேர்ந்த ஆனந்தி- சிலம்பரசன் இருவரும் காதலித்து ஜூலை 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு சிலம்பரசன் தனதுஅவரது தாய் ரேணுகாதேவி, தந்தை மாரியாபிள்ளை, குணாவதி, கங்காதுரை ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் நேற்று (நவ.15) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நவம்பர் 14-ம் தேதி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில், கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: EB பிரச்னைகளுக்கு ஈஸியான தீர்வு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!