News November 15, 2025
அரியலூர்: பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி இறப்பு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரிய கருப்பை ஆலமரம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 15, 2025
செந்துறை ரேஷன் கடையில் திருமாவளவன் பெயர் நீக்கம்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நிண்ணியூர் கிராமத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட நியாய விலை கடையின் முகப்பு மற்றும் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த திருமாவளவன் பெயரை இரவு நேரத்தில் சமூக விரோதிகளால் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்து செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்திவருகிறார்.
News November 15, 2025
அரியலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

அரியலூர் மாவட்டம் பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரியலூர் அருகே தங்க நகரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லாரியில் மோதியதில் சம்பவ இடத்துலையே பலியார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு, செய்து பிரேதத்தை கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


