News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
Similar News
News March 7, 2026
FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.
News March 7, 2026
Sports 360°: சஞ்சு சாம்சனுக்கு இந்த விருது கிடைக்குமா?

➤T20 WC Finals-ல் நாளை நியூசியை எதிர்கொள்கிறது இந்தியா ➤T20 WC அரையிறுதியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், Player of the Tournament விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ➤La Liga கால்பந்து தொடரில் செல்டா விகோ அணிக்கு எதிரான போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ➤பிராக் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ் FIDE தரவரிசையில் Top 10-ல் இடம்பிடித்துள்ளார்.
News March 7, 2026
எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்க: திருமாவளவன்

பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். EPS முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா என்றும், நிதிஷ்குமாரின் கதி EPS-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்; MGR, ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.


