News November 15, 2025

கடலூர்: மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி

image

நெய்வேலி அருகே சின்ன காப்பன்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மின்சார ஸ்விட்ச் பாக்ஸ் எரிந்த நிலையில் இருந்தது. அதற்கு கீழே அவரது தந்தை கலயபெருமாள் (85) இறந்த நிலையில் கிடந்தார். இதில், முதியவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரியவந்தது, சுப்ரமணியன் கொடுத்த புகாரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 3, 2026

கடலூர்: 5323 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

image

கடலூர் மாவட்டம் முழுவதும் 5,323 கிலோ 431 கிராம் குட்கா பொருட்களை போலீசார் நேற்று தீ வைத்து அழித்தனர். இதில் கடலூர் உட்கோட்டத்தில் 622 கிலோ 498 கிராம், சிதம்பரத்தில் 2507 கிலோ, விருத்தசாலத்தில் 399 கிலோ 79 கிராம், நெய்வேலியில் 280 கிலோ 544 கிராம், சேத்தியாத்தோப்பில் 196 கிலோ 887 கிராமம், பண்ருட்டியில் 549 கிலோ 862 கிராம், திட்டக்குடியில் 767 கிலோ 500 கிராம் அழிக்கப்பட்டது.

News March 3, 2026

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.<<>>in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

கடலூர் ஆட்சியரிடம் வழங்கிய ஆக்ஸி மீட்டர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட 240 எண்ணிக்கையிலான ஆக்ஸிமீட்டரை, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மருத்துவ பயன்பாட்டிற்காக துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மரு.ராஜா அவர்களிடம் நேற்று (02.03.2026) வழங்கினார். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் பாலசுப்பரமணியம் உட்ப பலர் உள்ளனர்.

error: Content is protected !!