News November 15, 2025

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 15, 2025

திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’ <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News November 15, 2025

திண்டுக்கல்: ஆபாச புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம்!

image

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 35 வயது பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட சம்பவம் தொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்த் (40) என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 15, 2025

திண்டுக்கல்: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, +2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!