News November 15, 2025
புதுவை: வாலிபர் கொலையில் 9 பேர் கைது

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் மகன் சந்தோஷ், ரெயின்போ நகர் பகுதியில் சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், டிவி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் நடந்த தகராறில் சந்தோஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரிய கடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 15, 2025
புதுச்சேரி: ஹைதராபாத் விமானம் ரத்து

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 78 பயணிகளுடன் ஹைதராபாத் புறப்பட நேற்று விமானம் ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கேப்டன் மணிஷ் காஜ்பீயி கண்டறிந்தார். இதையடுத்து விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
News November 15, 2025
காரைக்காலில் வாக்காளர் உதவி மையம் அமைப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
புதுவையில் கத்தியுடன் சுற்றிய வாலிபர்

புதுவை ரெட்டியபார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, உழவர்கரை வயல்வெளி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனையிட்டபோது, அவரிடம் கத்தி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் உழவர்கரைச் சேர்ந்த பிரேம்குமார் என தெரியவந்தது. இதனையடுத்து உடனே அவரை கைது செய்தனர்.


