News November 15, 2025

நவம்பர் 15: வரலாற்றில் இன்று

image

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.

Similar News

News March 22, 2026

இந்த வார்த்தையை இப்போதும் கேட்பதுண்டா?

image

வெளியூர்களில் ஒருவர் நம்மை பார்க்கும்போதும், வரன் தேடும்போதும் ‘பூர்விகம்’ எது என்று முன்னர் கேட்பதுண்டு. ஆனால், தற்போதோ சொந்த ஊர் எது என கேட்கின்றனர். பூர்விகம் என்பது உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர், சொந்த ஊர் என்பது நீங்கள் பிறந்த ஊர். தற்போது பலரும் பணி காரணமாக வெளியூரில் சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால் பூர்விகம் என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என கூறுகின்றனர். உங்கள் கருத்து?

News March 22, 2026

அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

image

நாடு முழுவதும் ஏப்ரலில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருள்கள் ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களுக்கான பொருள்களை அடுத்த மாதமே பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவும், உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாம். SHARE IT

News March 22, 2026

கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

image

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!