News November 15, 2025
தூத்துக்குடியில் 57 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காவல்நிலைய வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்ததுடன், சைபர் மோசடி வழக்குகளில் பணத்தை மீட்டதில் சிறந்து செயல்பட்ட 57 போலீசார் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்கள் இன்று (நவ.14) நற்பணி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
Similar News
News March 31, 2026
தூத்துக்குடி: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

தூத்துக்குடி மக்களே; அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE
News March 31, 2026
தூத்துக்குடி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

தூத்துக்குடி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.
News March 31, 2026
தூத்துக்குடி: மாணவி கொலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விளாத்திகுளம் அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கொலை சம்பவத்தில் 20 நாட்களுக்கு பின் தர்மமுனிஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மீண்டும் தர்ம முனிஸ்வரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


