News November 14, 2025
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய்க்கு பிடிவாரண்ட்

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
Similar News
News March 3, 2026
திமுக – காங்., கூட்டணி.. இதுவே கடைசி முயற்சி

திமுக – காங்., இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்., நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், கார்கே வேண்டுகோளை ஏற்று, குழப்பத்தை சரி செய்ய கடைசி முயற்சியாக செல்வப்பெருந்தகை சிதம்பரம் ஆகியோர் ஸ்டாலினை சற்றுநேரத்தில் சந்திக்கவிருக்கிறார். ஒருவேளை, கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஸ்டாலினும் ஆலோசிக்கவிருக்கிறார்.
News March 3, 2026
₹3,200 + ₹3,500 + ₹4,000.. ஸ்டாலின் அறிவித்தார்

மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ₹2,000 வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, *29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200 +₹2000 என மொத்தம் ₹3200, *ஐந்து லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500 +₹2000 என மொத்தம் ₹3500, *பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மொத்தம் ₹4000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


