News November 14, 2025
கல்லால் தாக்கி கொலை 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Similar News
News November 15, 2025
தூத்துக்குடியில் 57 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காவல்நிலைய வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்ததுடன், சைபர் மோசடி வழக்குகளில் பணத்தை மீட்டதில் சிறந்து செயல்பட்ட 57 போலீசார் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்கள் இன்று (நவ.14) நற்பணி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
News November 14, 2025
VOC துறைமுகத்தில் அக்டோபர் மாத ஏற்றுமதியில் 8.52% வளர்ச்சி!

தூத்துக்குடி VOC துறைமுகம் 2025 அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. மொத்த 20,584 TEUs ஏற்றுமதி கன்டெய்னர்களில் 17,506 TEUs Direct Port Entry (DPE) முறையில் செயல்படுத்தப்பட்டதாக துறைமுகம் தெரிவித்துள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது 8.52% வளர்ச்சியை காட்டுகிறது. கடல் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் பணிகளில் துறைமுகத்தின் செயல்திறன் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.
News November 14, 2025
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தூத்துக்குடி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<


