News November 14, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
நெல்லை: மக்களே உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று நாம் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நீங்கள்<
News March 18, 2026
நெல்லை: தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது – ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீரவநல்லூரில் இன்று அளித்த பேட்டியில், அதிமுக கோட்டை என எதுவும் இல்லை. அதில் ஓட்டை விழுந்து நிறைய காலம் ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. நான் பதவியை எதிர்பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவில்லை தொண்டனாகத் தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தேன்.
ஸ்டாலின் உத்தரவிட்டால் தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டுயிட முடியும் என்றார்.
News March 18, 2026
நாங்குநேரி அருகே சரமாரி வெட்டிக்கொலை

நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). விவசாயியான இவர் நேற்று தனது வயலுக்கு செல்வதற்காக பருத்திபாடு சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


