News November 14, 2025
கடலூர்: மனைவி நோயால் பாதிப்பு-கணவன் தற்கொலை

கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (34) கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிக்கு தைராய்டு நோய் உள்ளதாக தெரிகிறது. இதனால் முத்தமிழ்செல்வன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 3, 2026
கடலூர் ஆட்சியரிடம் வழங்கிய ஆக்ஸி மீட்டர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட 240 எண்ணிக்கையிலான ஆக்ஸிமீட்டரை, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மருத்துவ பயன்பாட்டிற்காக துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மரு.ராஜா அவர்களிடம் நேற்று (02.03.2026) வழங்கினார். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் பாலசுப்பரமணியம் உட்ப பலர் உள்ளனர்.
News March 3, 2026
கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சாரம்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் மேற்கு ஒன்றியம் நடுவீரப்ட்டு, புதுக்குப்பம், பட்டீஸ்வரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வாக்குச்சாவடி திருவிழா என்ற பெயரில், திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை துண்டு பிரசுரமாக வினியோகம் செய்து, நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


