News November 14, 2025

குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பேன்: CM ஸ்டாலின்

image

தாயன்பு காட்டி குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிடமாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன் எனவும் அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த பார்வையும் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

Similar News

News November 14, 2025

தமிழ் நடிகர் மறைவு.. திரை பிரபலங்கள் அஞ்சலி

image

மறைந்த நடிகர் அபிநய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் KPY பாலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் & அபிநய்-யின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த அபிநய்யின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள், அவருடனான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

News November 14, 2025

பிஹாரின் சீமாஞ்சல் பகுதியின் நிலவரம் என்ன?

image

அராரியா, பூர்ணியா, கதிஹார், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 24 தொகுதிகள் ‘சீமாஞ்சல்’ பகுதி என கூறப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம். இந்த வாக்குகளை பிரிக்கவே ஓவைசியின் கட்சி, MGB உடன் சேரவில்லை என கூறப்படுகிறது. 2020 தேர்தலில், இப்பகுதியில் NDA – 12, MGB – 7, ஓவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றன. இம்முறையும் அங்கு NDA கூட்டணியே (10+) முன்னிலையில் உள்ளது.

News November 14, 2025

பிஹாரில் திடீர் ட்விஸ்ட்

image

பிஹாரில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 உடன் ஒப்பிடுகையில் சுமார் 39 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் சூழல் உருவாகிருப்பதால், நிதிஷின் கரம் அங்கு இன்றளவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேடியு பின்னடைவை சந்தித்த நிலையில், நிதிஷ் CM வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் பெரும் ட்விஸ்ட் தான்.

error: Content is protected !!