News November 14, 2025
திருவாரூர் மாவட்டத்தில் TET தேர்வு எழுதும் 8213 பேர்

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 15, 16 தேதிகளில் TET தேர்வை மொத்தம் 8213 பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 அன்று நடைபெறும் TET-I தேர்வை 8 மையங்களில் 1843 தேர்வர்களும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள TET-II தேர்வினை 19 மையங்களில் 6370 பேரும் எழுதவுள்ளனர். தேர்வு மையத்தில் தடையில்லா மின்வசதி, குடிநீர் வசதி, அரசு போக்குவரத்து வசதி ஆகியவை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 14, 2025
திருவாரூர்: விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டுக் கூட்டம் கடந்த நவம்பர் 12 அன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மக்களை பாதுகாப்போம் நாட்டை பாதுகாப்பும் எனும் முழக்கத்துடன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நவம்பர் 18-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
திருவாரூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
திருவாரூர்: ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பம்

நவம்பர் 1-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்துவ பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி 550 பேருக்கு ரூ.37,000-மும், கன்னிகாஸ்திரிகளுக்கு ரூ.60,000-மும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 28.02.2026 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


