News November 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வருகிற 30.11.2025-குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்படாத படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

புதுடெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவி பெற 100 மற்றும் 04364 -240100 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
மயிலாடுதுறை: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
மயிலாடுதுறை முழுவதும் வெடிகுண்டு சோதனை

புதுடெல்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.பி உத்தரவின் படி, மயிலாடுதுறையில் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு கண்டறியும்/அகற்றும் படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


