News April 20, 2024
தமிழக-கேரள எல்லையில் பலத்த சோதனை

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 26, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
கோவையில் 2 நாள் சிறப்பு வரி வசூல் முகாம்

2025-2026 முதலாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் கோவையில் அனைத்து மண்டலங்களிலும் வரும் 27,28 ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
News September 26, 2025
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி!

கோவை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை சார்பில் மகளிர்க்கான இலவச உணவு பதப்படுத்தும் பயிற்சி அக்.27 முதல் 26 நாட்கள் வடவள்ளியில் நடைபெறும். சிறுதானியம், காய்கறி பொருட்கள் உள்ளிட்டவை செய்முறை கற்பிக்கப்படும். 18–45 வயதினர் பங்கேற்கலாம். முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ், வங்கி கடன், மானியம் வழிகாட்டுதல் வழங்கப்படும். தொடர்புக்கு: 9944799995/8825812528