News November 14, 2025
ஈரோட்டில் நடந்த கொடூர நிகழ்வு!

டி.என்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மகன் 10 வகுப்பு படித்து வருகிறார். பரமேஸ்வரன் தான் குளிக்க தண்ணீர் எடுத்து வைக்க மகனிடம் கூறியுள்ளார். மகன் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் சாப்பாட்டிற்கு வைக்கப்பட்ட சுடு தண்ணீரை மகன் மீது ஊற்றியதால் மகன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 14, 2025
ஈரோடு: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 14, 2025
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருடிய நபர் கைது

மலையம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி எடக்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரவில் 40 மீட்டர் ஒயர் மற்றும் மின் சாதனங்களை திருடிய வழக்கில் கோவில்பாளையம் அருள்ராஜ் (46) என்பவரை மலையம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து கொடுமுடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News November 14, 2025
ஈரோடு வீரர் தங்கம் வென்று சாதனை!

சென்னை நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் (65+ பிரிவு) இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பான சாதனை புரிந்துள்ளார். 2000 மீ. ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம், 10 கி.மீ. மராத்தான் மற்றும் 1500 மீ. ஓட்டப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


