News November 14, 2025
41 பேரை கொன்றவன் தலைவனா? யுகபாரதி

திமுக சார்பில் சென்னையில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தெருவில் கூட்டத்தை கூட்டி 41 பேரை கொன்றவன் தலைவனா என விஜய்யை மறைமுகமாக சாடினார். 1950-களில் அண்ணா கூட்டம் நடத்திய போது, பணம் வசூல் செய்து கூட்டத்தை நடத்திய கிட்டப்பாவிற்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதை புரிந்து கொண்ட அண்ணா, அவரை MLA ஆக்கினார், அவர் தான் தலைவர் என்றும் யுகபாரதி கூறினார்.
Similar News
News March 12, 2026
இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் சப்ளை.. IOCL முக்கிய அறிவிப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என தகவல் பரவிவரும் நிலையில், மக்கள் அவசர அவசரமாக கேஸுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து IOCL முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைந்து கியாஸ் புக்கிங் செய்யத் தேவையில்லை எனவும், அனைவரின் நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
News March 12, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <


