News November 14, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 13, 2025
வேலூரில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.13) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News November 13, 2025
வேலூர்: யோகா பயிற்சியாளர் தேர்வு -கலெக்டர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
வேலூர்: பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த முதியவர்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுக்கத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று (நவ.12) முதியோர் ஒருவர் இறந்து கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், உடலை மீட்டு, அந்த முதியவர் யார் என்ற விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


