News November 14, 2025
கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
Similar News
News March 11, 2026
கோவை நகர் முழுவதும் போலீஸ் அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
News March 11, 2026
மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


