News November 13, 2025

டாஸ்மாக் ஊழியரிடம் வழிபறி: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

image

விழுப்புரம்,பனையபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 4,37,592 பணத்தை வழிபறி செய்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (நவ.13) நடைபெற்றது. பண்ருட்டி அருகேயுள்ள மாம்பட்டு பகுதியை சேர்ந்த சசிகுமார், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் 3 வருடம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Similar News

News November 13, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (13.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News November 13, 2025

விழுப்புரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

image

விழுப்புரம் நகரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்பைஸ் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாளை(நவ.14) காலை7 மணி முதல் 11 மணி வரை இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. விழுப்புரம் லைன்ஸ் சங்கம் மற்றும் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

விழுப்புரம்: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு.

error: Content is protected !!