News November 13, 2025
திருச்சி: கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர பணியாளர் நாள் குறைதீர் கூட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நாளை (நவ.14) நடைபெற உள்ளது. இதில், ஊழியர்கள் தங்களது குறைகளை நேரிலோ அல்லது <
Similar News
News March 22, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 22, 2026
திருச்சி: கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – எஸ்பி

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
திருச்சி: ஆட்சியர், ஆணையரை மாற்ற கோரிக்கை

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நீண்ட நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென, பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


