News November 13, 2025
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
Similar News
News November 13, 2025
கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News November 13, 2025
புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை நார்த்தாமலை அடுத்த பூங்குடியில் முருகேசன் என்பவர் மகன் ஹரிணேஸ்வரன் (11) பூங்குடியில் உள்ள குளத்தில் (நவ.8) அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
புதுகை: சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்க சிறப்பு முகாம்!

புதுகை மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. பத்து வயதுக்குள் உட்பட்டவர்கள் தொடங்கலாம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரு.1,50,000 வரை செலுத்தலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படும். 80.சி பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


