News November 13, 2025
பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
பெரம்பலூர்: 12 கிலோ கஞ்சா கடத்தல்-இருவர் கைது

பெரம்பலூர், வழியாக கஞ்சா கடத்தி செல்லப்போவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் ராஜ்குமார் (36), யாட்லா துர்கா ராவ் (32) ஆகிய இருவரும் சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக சிவகாசிக்கு கடத்தி செல்வதாக தெரிந்த நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 10, 2026
பெரம்பலுர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <
News March 10, 2026
பெரம்பலுர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


