News April 20, 2024
வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனை

வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்திருப்பது தென்கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உடன் மோதல் போக்கு நீடிப்பதால், அந்நாடுகளை அச்சுறுத்த வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஹவாசால் 1 ரா-3, பியோல்ஜி 1-2 ஆகிய 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
Similar News
News November 12, 2025
நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.
News November 12, 2025
தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
News November 12, 2025
₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


