News November 13, 2025
சாப்பிட்டு முடிச்சதும் இத கண்டிப்பா குடிங்க!

சாப்பிட்டு முடித்ததும் வெறும் தண்ணீரை குடிப்பதை விட, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம் *சீரக நீர் ஜீரணத்தை தூண்டுகிறது *வாயு தொல்லை, வயிறு உப்புசத்தை குறைக்கும் *சாப்பிட்ட பின் சீரக நீர் குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும் *உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் *வாயை புத்துணர்ச்சியோடு வைத்து கொள்ள உதவுகிறது.
Similar News
News November 13, 2025
மெட்ரோ ரயில்வே டிராக்கில் சோலார் பேனல்கள்

நாட்டிலேயே முதல்முறையாக, RRTS (அ) மெட்ரோ ரயில்வே டிராக்குகளில் சோலார் பேனல்களை வைத்து மின் உற்பத்தி செய்யும் ‘Solar on track’ எனும் திட்டம், உ.பி.,யின் துஹாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17,500 kWh எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் 16 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்க முடியும். 550 Wp திறன் கொண்ட 28 உயர்திறன் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
News November 13, 2025
RCB அணியை வாங்குகிறதா ஹோம்பாலே பிலிம்ஸ்?

நடப்பு IPL சாம்பியன் RCB அணி ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த அணியை யார் வாங்குவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், RCB அணியை வாங்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. KGF, காந்தாரா படங்களை ஹோம்பாலே பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஹோம்பாலே பிலிம்ஸ் RCB-ஐ வாங்கினால் அந்த அணிக்கு என்ன பெயர் வைக்கலாம்’னு சொல்லுங்க?


