News November 13, 2025
சென்னையில் தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பாபன் மண்டல் (24). இவர், டி.பி.சத்திரம் பகுதியில் தங்கி, வீட்டு பராமரிப்பு வேலை பார்த்து வந்தார். பாபன் மண்டல் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை அவரை திட்டி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <
News November 13, 2025
சென்னையில் சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News November 13, 2025
சென்னை: moj Appல் பழக்கம்; சீரழிந்த பெண்ணின் வாழ்கை!

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், மோஜ் செயலி மூலம் குமரியைச் சேர்ந்த லிபின் ராஜ்(25) என்பவருடன் பழகியுள்ளார். கடந்த 4 மாதங்களாக பழகி வந்த லிபின் ராஜ், நாளடைவில் இளம்பெண்ணை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இச்சைக்கு இணங்க மறுக்கவே அப்பெண்ணின் தாயாருக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.


