News November 13, 2025

தஞ்சை: கன்று குட்டியை காப்பாற்றிய வீரர்கள்

image

திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பசு மாடு நேற்று நள்ளிரவு காவிரி ஆற்றின் நடுத்திட்டில் கன்று ஈன்று உள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் கன்று குட்டியுடன் கரை திரும்ப சிரமப்பட்டதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் கன்று குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

Similar News

News November 13, 2025

தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 13, 2025

தஞ்சை: இளம்பெண் தற்கொலை முயற்சி

image

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் இருந்து நேற்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ஆற்றில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்புத் துறையினர் இதனை கவனிக்கவே, அவரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 13, 2025

தஞ்சை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!