News November 13, 2025

தூத்துக்குடி: இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சுடலைமணி – ராணி தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கான்கிரீட் போடும் பணிக்கு இருவரும் சென்று வந்தனர். அப்போது நாசரேத் பகுதியில் நடைபெற்ற தரைப்பாலம் கட்டும் பணிக்கு சென்றபோது நேற்று மாலை ராணி சிமெண்ட் கலக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

தூத்துக்குடி வந்த சட்டமன்ற இணை செயலாளர் உயிரிழப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆய்வுக்காக வந்திருந்த தமிழக சட்டமன்ற இணை செயலாளர் ரமேஷ் (57) என்பவர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News November 13, 2025

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி முகாம்கள் ரத்து

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் முகாம் வரும் 18ம் தேதி வரை அந்தந்த அலுவலகங்களில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறவிருந்த முகாம்கள் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் இளம் பகவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

தூத்துக்குடி:ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

தூத்துக்குடி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணு

error: Content is protected !!