News November 13, 2025

தென்காசியில் கடைகளுக்கு அபராதம்

image

தென்காசி நகராட்சி 29வது வார்டு சுவாமி சன்னதி பஜாரில் உள்ள கடைகளில் இன்று தென்காசி நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தும் கடைகளில் நெகிழிகள் பயன்படுத்தபடுகிறதா என சோதனை நடந்தது.
சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடந்த இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நெகிழிகள் பயன்படுத்தும் கடைகளுக்கு சுகாதார ஆய்வாளரால் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News November 13, 2025

தென்காசி: சுகாதார நிலையத்தில் பணியிடம் விண்ணப்பியுங்க!

image

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் கீழ் காலியாக உள்ள ICTC Counsellor தற்காலிக பணியிடங்களில் பணியாளர்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளார். பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://tenkasi.nic.in/notice_category/recruitment/60 தகவல்.

News November 13, 2025

தென்காசி: அரசு சான்றிதழுடன் இலவச தொழிற் பயிற்சி

image

தென்காசி மாவட்டம் இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்தும் சுயதொழில் கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மத்திய அரசு சான்றிதழுடன் இன்று இலத்தூர் ஹைலைட் சிட்டி , தென்காசி மெயின் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க..

News November 13, 2025

செங்கோட்டை – திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் ரத்து

image

செங்கோட்டை – திருநெல்வேலி வண்டி எண் ( 56742) செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் (நவ-13 முதல் 29) வரை , சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி – செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் ( 56743) திருநெல்வேலி – சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும் . பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!