News November 13, 2025

பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

image

கீழப்பெரம்பலூர் மற்றும் தேனூர் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சீகூர், புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News November 13, 2025

பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2025

பெரம்பலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

பெரம்பலூர்: எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று (12.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!