News November 13, 2025
நாகை: பெண் தூக்கிட்டு தற்கொலை

நாகூர் அமிர்தா நகர் வண்ணா குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி நந்தினி (35). இருவரும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைபற்றி, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
நாகை: அரசு பேருந்து மோதி டாக்டர் பலி

நாகை அருகே கீழ்வேளூர் கிழக்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் திருமலை செல்வர். மருத்துவரான இவர் நேற்றிரவு திருவாரூரில் இருந்து கீழ்வேளுருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்வேளுர் அரசாணி குளம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், திருமலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
நாகை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
நாகை: நடுரோட்டில் மது அருந்திய 2 பேர் கைது

நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகூர் நாகை மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால் பண்ணை சேரி மெயின் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக 2 நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் தமலேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.


