News November 13, 2025

திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

கூத்தாநல்லூர் அருகே உள்ள பெரியகுருவாடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (49). இவர் தனது பைக்கில் குலமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற 27 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவருக்கு, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

திருவாரூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

திருவாரூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 25/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2025

திருவாரூர்: பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு

image

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ள கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. இதில் இலவச தொலைப்பேசி எண் 1077 என்ற எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க விரும்பினால் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!