News April 20, 2024

தேர்தல் பணியில் ஈடுபட்டவர் மாரடைப்பால் மரணம்

image

புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வாக்குச் செலுத்த வந்தோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர் என மொத்தம் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Similar News

News August 21, 2025

BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

மக்கள் மன்னன், பெரியாரின் பேரன் விஜய் என புகழாரம்

image

மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

News August 21, 2025

தவெக மாநாடு: 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி

image

மதுரையில் தவெக மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் வெயில் தாங்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவரை சுமார் 50 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில், உடல்நலக் கோளாறு ஏற்பட்ட 9 பேர் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு ஹாஸ்பிடலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!