News November 11, 2025
சிறுமலையில் மரத்திலிருந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

திண்டுக்கல் சிறுமலை பழையூரைச் சேர்ந்த சுரேஷ் (28) அப்பகுதி தோட்டத்தில் சவுக்கு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். தலைக்கு ஏற்பட்ட கடும் காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 12, 2026
திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.


