News November 11, 2025

மயிலாடுதுறை வட்டத்தில் “உழவரைத் தேடி” முகாம்

image

மயிலாடுதுறை வட்டம் வரதம்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற (நவ.14) தேதி காலை 10:30 மணிக்கு உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் “உழவரை தேடி” முகாம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

மயிலாடுதுறை: முக்கிய ரயில் நேரம் மாற்றம்

image

சென்னையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக புறப்படும். வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சென்னை எக்மோரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு அனைத்து சந்திப்புகளுக்கும் 2.15 மணி நேரம் காலதாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 14, 2026

மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 14, 2026

மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!