News November 11, 2025

நாகூர் தர்கா குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

image

திருச்சி மதுரை ரோட்டில் வசிப்பவர் அபுதாகிர் (வயது 25) இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் நாகூர் தர்காவிற்கு வந்துள்ளார். அப்போது நண்பர்களுடன் தர்கா குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை சம்பவம் குறித்து அறிந்த நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 11, 2025

நாகை: விவசாயிகள் கணக்கில் ரூ.285 கோடி வரவு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், கடந்த 03.09.2025 முதல் 09.11.2025 வரை 26,213 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 285 கோடியே, 41 இலட்சத்து, 30 ஆயிரத்து 392 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

நாகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

நாகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!