News November 11, 2025

செங்கல்பட்டு: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

image

செங்கல்பட்டில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

செங்கை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

செங்கல்பட்டு: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

செங்கல்பட்டு: தாறுமாறாக ஓடிய ஆட்டோ; இருவர் கைது

image

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடந்த வாரம் ரூ.20,000 பணத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று (நவ.10) போலீசார் கைது செய்தனர். பெசன்ட் நகரைச் சேர்ந்த சங்கர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்டோவை பின் தொடர்ந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!