News November 11, 2025
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
Similar News
News November 11, 2025
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 11, 2025
திருச்சி: குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், அண்ணா நகர், காஜா பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், திருவெறும்பூர், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.12) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், நாளை மறுதினம் (நவ.13) வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
திருச்சி: சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சாகிப் நந்தட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 20,27, டிச.4,11,18,25, ஜன.1,8,15 ஆகிய தேதிகளில் (வியாழன் மட்டும்) திருச்சி வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் காலை 10 மணிக்கு நந்தட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


