News November 11, 2025
ரசிகர்கள் சோகமடைவதை விரும்பாத விஜய்!

‘யார் பெற்ற மகனோ’ என்ற பாடலுடன் எமோஷனலாக ‘ஜனநாயகன்’ படம் முடிவடையும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதை விஜய் விரும்பவில்லையாம். ரசிகர்கள் குஷியுடன் ஆனந்தமாக விடைபெற வேண்டும் என்ற திட்டத்தில் அவர் இருக்கிறாராம். அதற்காக தான், ‘தளபதி கச்சேரி’ பாட்டில் கடைசி ஒரு நிமிடம் பயங்கர Goosebumps கொடுக்கும் வகையில் தயார் செய்துள்ளார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து தியேட்டரில் பார்ப்போம்!
Similar News
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?
News November 11, 2025
3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் பண்ணலயா.. உஷார்!

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.
News November 11, 2025
நடிகர் ஸ்ரீகாந்திடம் ED தீவிர விசாரணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் <<18225496>>ஸ்ரீகாந்த்<<>> ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்.28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இன்று ஆஜராகியுள்ள இவரிடம், போதைப் பொருள் வாங்கியது குறித்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.


