News November 11, 2025

தூத்துக்குடியில் மீண்டும் அரசு வேலை! 10th தகுதி.. உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, ஸ்ரீவை, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம் பகுதியில் கிராம உதவியாளர் பணிகளுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதை அடுத்து விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2025-ஆக உள்ளது. 21 வயது நிரம்பிய 10th படித்தவர்கள்<> www.thoothukudi.nic.in <<>>என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

Similar News

News November 11, 2025

தூத்துக்குடியில் கலை போட்டிகள் அறிவிப்பு

image

கலை பண்பாட்டு துறை வாயிலாக 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான கலைப்போட்டிகள் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குரல், இசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய 4 பிரிவில் கலை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

தூத்துக்குடி: வியாபாரி தீக்குளித்து தற்கொலை

image

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் உள்ளனர். கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

News November 11, 2025

தூத்துக்குடி கிறிஸ்த்தவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்த்தவர்களுக்கு அரசு மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டைச்சார்ந்த அனைத்துபிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்த்தவர்களுக்கு பயனடையும் வகையில் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்த்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000- ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது

error: Content is protected !!