News November 11, 2025

மயிலாடுதுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

மயிலாடுதுறை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

மயிலாடுதுறை எம்.பி சுதா உறுதி

image

வாணகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த மயிலாடுதுறை எம்.பி சுதா, இது தொடர்பாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும், ஒரு சில நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

மயிலாடுதுறை மக்களே, முற்றிலும் இலவசம்!

image

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <>இங்கே கிளிக் <<>>செய்து அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!