News November 11, 2025
புதுகை: சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதல்

கரம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரம் அருகே பந்துவகோட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (53). இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் மோதியதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
புதுகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 11, 2025
புதுகை மாவட்டத்தில் ஓர் புதிய அறிமுகம்!

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கில் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி பெற E-KYC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பதை APT 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் பெறலாம். காகிதமற்ற பண பரிவர்த்தனைகளை இதன் மூலம் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, புதுகை மாவட்ட அஞ்சலக கூட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
புதுகை மக்களே இது முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <


