News November 11, 2025
திருவாரூர்: 22 பவுன் நகை திருடிய நபர் கைது

திருவாரூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர்-ஜெயசுதா தம்பதியர். இவர்கள் இருவரும் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அக்.16-ம் தேதி பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் திருட்டபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் நகையை திருடியது சேலத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 11, 2025
திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

டெல்லி செங்கோட்டையில் நேற்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததை ஒட்டி, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் ரயில்வே போலீசார், ரயில்வே படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகள், ரயில் நிலையத்தின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை சோதனை செய்தனர்.
News November 11, 2025
திருவாரூர் மக்களே இது முற்றிலும் இலவசம்

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், இங்கே <
News November 11, 2025
திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

மன்னார்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நவ.4-ம் தேதி காணவில்லை என மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பழகி, சிறுமியை நெல்லைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


