News November 11, 2025
3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
சாகச பயணம் செய்ய ஆசையா?

சுற்றுலா செல்பவர்களில் பலருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகம். அதிலும், Zig Zag சாலைகளை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அப்படி இந்தியாவில் வளைந்து நெளிந்து ஓடும் பெஸ்ட் Zig Zag சாலைகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இதில், நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் ரோடு எது? கமெண்ட் பண்ணுங்க.
News November 11, 2025
தந்தை-மகன் விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டது

தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டதாக ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். அன்புமணியின் போட்டி நடவடிக்கைகளுக்கு பிறகு, மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தப்பட்டதாக கூறிய அவர், அவரால் எங்களுக்கும் கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மாம்பழ சின்னத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
News November 11, 2025
மழைக்காலத்தில் இந்த கசாயம் அவசியம்!

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ★தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ★செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.


