News November 11, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (நவ.10) இரவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சந்துகள், நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதவி தேவை எனில், படத்தில் உள்ள எண்ணிற்கு அழைக்கவும்.

Similar News

News November 11, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ-10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

பள்ளி மாணவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 19 வயதிற்குட்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிஎஸ்கே மற்றும் திருப்பத்தூர் கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தக்கூடிய கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கு கொள்ள பதிவு செய்ய கடைசி தேதியாக நாளை 11.11.2025 அறிவிக்கப்பட்டுள்ளது

News November 10, 2025

திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (நவ.10) விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “உங்களது வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாகவும் அதை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகளை மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்களும் இணையதள வாசிகளும் பாதுகாப்புடன் இணையதளத்தை பயன்படுத்தவும்”. இவ்வாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!