News November 10, 2025
சென்னையில் மத வழிபாட்டு தலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி சென்னையிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள், முக்கிய மத வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக ரயில் நிலையங்களில் பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 11, 2025
டெல்லி சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது: விஜய்

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோயுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 11, 2025
நாட்டை உலுக்கிய கார் வெடிப்பு: தலைவர்கள் இரங்கல்

டெல்லியில் ஹூண்டாய் கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டெல்லி சம்பவம் மனதை உலுக்கியதோடு, மிகுந்த வேதனை அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இதேபோல், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், EPS உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


