News November 10, 2025
டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத சதிச்செயலா?

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News March 5, 2026
கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.
News March 5, 2026
தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.
News March 5, 2026
பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதுபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றே தெரியவில்லை என சாடினார். தமிழ்நாட்டில், பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனக்கூறிய அவர், இதுதான் திமுகவுடன் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்றார்.


