News November 10, 2025
வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.
Similar News
News March 20, 2026
MGR, ஜெ., சிலைகளுக்கு கிளவுஸ் போட்ட அதிகாரிகள்

அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என ECI அறிவித்தது. இதையடுத்து மதுரையில் Ex CM MGR & ஜெயலலிதா சிலைகளை மூடியிருந்த துணிகளை அதிகாரிகள் அகற்றினர். எனினும் அவர்களின் கை விரல்கள் அரசியல் சின்னத்தை (இரட்டை இலை) குறிப்பதாக கூறி, கைகளை மட்டும் ‘கிளவுஸ்’ போல துணியால் மறைத்துள்ளனர். இந்த விஷயம் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?
News March 20, 2026
போன்களில் Pre-install-ஆக வரும் ஆதார் ஆப்?

போன்களில் Clock, Calculator போலவே ஆதார் ஆப்பையும் Pre-install முறையில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஜனவரியில் செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு Email அனுப்பியுள்ளது. ஆனால், இதனால் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே தனியாக தயாரிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லாதது எனக்கூறி சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் இத்திட்டத்தை மறுத்துள்ளன.
News March 20, 2026
சீட்டுக்கு பணம் பெற்று மோசடி.. திமுக தலைமை அதிர்ச்சி!

MLA சீட்டு வாங்கி தருவதாக கூறி OPS ஆதரவாளர் ₹1 கோடி மோசடி செய்த சம்பவம் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். பெரியகுளம் கவுன்சிலரான சுதாவின் கணவர் நாகலிங்கம், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட OPS-ன் ஆதரவாளரான அபுதாஹிரிடம் பணத்தை கொடுத்துள்ளார். இதில், ஆசிஃப் ராஜா, கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில், எங்கே தவறு நடந்தது என திமுக விசாரணையில் இறங்கியுள்ளது.


